Showing posts with label பாராளுமன்றம். Show all posts
Showing posts with label பாராளுமன்றம். Show all posts

Feb 26, 2015

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.திமு.க., சார்பில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் 67-வது பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் 100 இடங்களில் 100 வாகனங்கள் மூலம் தலா 1000 பேருக்கு என ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.







திருப்பூர் மாநகர் மாவட்ட அ.திமு.க., சார்பில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் 67-வது  பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் 100 இடங்களில் 100 வாகனங்கள் மூலம் தலா 1000 பேருக்கு என ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, ஆனந்தகுமார், ஸ்டீபன்ராஜ், சீனியம்மாள், கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், எஸ்.பி.,என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் கீதா, சண்முகசுந்தரம், ரத்னகுமார், ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Jan 21, 2015

திருப்பூர் மாநகராட்சி 23-வது வார்டு, அம்பேத்கர் நகரில் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடப்படுவதை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார்







திருப்பூர் மாநகராட்சி 23-வது வார்டு, அம்பேத்கர் நகரில் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடப்படுவதை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், சண்முகசுந்தரம்,  மற்றும் ஹரிஹரசுதன், தமிழக அரசின் கள விளம்பர துணை இயக்குனர் சண்முக சுந்தரம்,  மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலைச்செல்வன், தமிழ்மொழி அமுது, உதவி அலுவலர்கள் சாய்பாபா, பாலாஜி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம்; அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தந்தவர் மக்கள் முதல்வர் அம்மா பொங்கல் விழாவில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெருமிதம்










திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் ஊராட்சி அம்மா நகரில், பொங்கல் விழா நடந்தது. 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கோவை எம்.பி., நாகராஜன், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், சப்&கலெக்டர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தாரை தப்பட்டை முழங்க அப்பகுதி மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
 விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:&பல்லடம் சட்டமன்ற தொகுதி, கேத்தனூர் ஊராட்சியில் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் ஆணைக்கிணங்க, பட்டாக்களை வழங்கி வீடுகளை உருவாக்கி இப்பகுதியில் பொங்கல் விழா நடக்கிறது. இன்று மனிதனுக்கு தேவை உண்ண உணவு, இருப்பிடம், உடை ஆகியவை; இம்மூன்றும் தான் முக்கிய தேவைகள். இன்றைக்கு மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் ஆட்சி பொறுபேற்ற போது முதல் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ  விலையில்லா அரிசி வழங்கி வருகிறார், அதே போல மக்களின் குடியிருப்பு சிக்கல்களை தீர்க்க வருடத்துக்கு 2 லட்சம் பட்டாக்களை வழங்க அம்மா அவர்கள் உத்தரவிட்டார். அதனடிப்படையில் நிலத்தை வகை மாற்றம் செய்து 51 பேருக்கு பட்டா வழங்கி, ரூ. 1.03 கோடி வீடு கட்டவும், அடிப்படை வசதிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்லது. 
 மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் காலத்தில், தமிழகத்தில் ஏழை எளீய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்லது. அது போல உடுக்க உடை வேண்டும், என்பதற்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. 
 இவ்வாறு மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றையும் தந்து உள்ளார்.அனைத்து மக்களும் இன்பமாக தமிழக மக்கள் பொங்கல் கொண்டாட வாழ்த்து செய்தியும் அம்மா தந்துள்ளார். கேத்தனூரில் உருவாக்கப்பட்டுள்ள அம்மா நகர் மேம்படவும் தொடர்ந்து பொங்கல் விழா நடத்தவும், மிகப்பெரிய மாநகராக அம்மா நகர் உருவாகவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கே.என்.விஜயகுமார், சிவாச்சலம், புத்தரச்சல் பாபு, யு.எஸ்.பழனிசாமி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், வக்கீல் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் ஊராட்சி அம்மா நகரில், பொங்கல் விழா நடந்தது. 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கோவை எம்.பி., நாகராஜன், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், சப்&கலெக்டர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தாரை தப்பட்டை முழங்க அப்பகுதி மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கே.என்.விஜயகுமார், சிவாச்சலம், புத்தரச்சல் பாபு, யு.எஸ்.பழனிசாமி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், வக்கீல் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Jan 1, 2015

இந்தியாவிலேயே அதிக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர் அம்மா வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு








திருப்பூர், ஜன. 1-
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறப்புரையாற்றினார்.திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தனர். 
 விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கி பேசும்போது கூறியதாவது&
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படும் இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்கள் பல செயல்படுத்தி வருகிறது. அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது 54 வாக்குறுதிகள் அளித்தார்கள்.ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மக்கள் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அம்மா அவர்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்து வருகிறார். எத்தணையோ பேர் முதல்வராக பொறுப்பேற்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் அளித்தார்கள். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அம்மா அவர்கள் அளித்த 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் அம்மா அவர்கள். 
 இன்றைக்கு தமிழக மக்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவை தொடர்ந்து தந்து கொண்டிருக்க காரணம் அம்மா அவர்களின் மகத்தான திட்டங்கள். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி, திருமண உதவியாக 4 கிராம் தங்கம், திருமண உதவி தொகை போன்ற நல்ல திட்டங்களை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார். மேலும் கல்விக்கா அதிக நிதி ஒதுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து பொருட்களையும் விலையில்லாமல் வழங்கி தமிழகம் கல்வியில் முன்னேற வழிவகுத்தவர் அம்மா அவர்கள்.
 மக்கள் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்துக்கும் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் என அம்மா அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். என்றைக்கும் நீங்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 விழாவில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுன்சிலர்கள் பட்டுலிங்கம், அன்பகம் திருப்பதி,  கணேஷ், முருகசாமி,சண்முக சுந்தரம்,  சபரி, கனகராஜ், பாலன், ,மற்றும் கருணாகரன், நீதிராஜன், ராஜேஷ்கண்ணா, ராஜ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Dec 31, 2014

திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு





திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ்  துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மண்டல தலைவர் .ராதாகிருஷ்ணன். அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், கண்ணபிரான்.உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Dec 29, 2014

திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது.








திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது. கட்சியினர் அளித்த மனுக்களை கைத்தறி துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா , வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் பரிசீலனை செய்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி,  துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கு நேற்று கட்சி நிர்வாகிகள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பங்களை அளித்தனர்.







திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கு நேற்று (சனி ) கட்சி நிர்வாகிகள் விண்ணப்பம் அளித்தனர். திருப்பூர் குலாலர் கல்யாண மண்டபத்தில் ,கொங்கு மெயின் ரோடு பகுதி தேர்தலுக்கு  தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பங்களை அளித்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் கணேஷ், முருகசாமி உள்ளிட்டோர பங்கேற்றனர். t

Dec 22, 2014

திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்







திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம்,  மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்







திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு, சான்றிதழ்களை  வழங்கினார்.திருப்பூர்  துணை மேயர் சு.குணசேகரன், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது



அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் 
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது



திருப்பூர், டிச. 22-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தலைமை தாங்கி  சிறப்புரையாற்றினார். அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், வெ.பழனிசாமி  அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் வனத்துரை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:&
 மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார்கள். அம்மா அவர்கள் தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்கள். இந்த தேர்தலை நீங்கள் அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். அம்மா அவர்கள் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம். கடந்த வாரத்தில் தி.மு.க., அமைப்பு தேர்தலில் பல்வேறு தகராறுகள் நடந்ததை அறிவோம். ராணுவ கட்டுப்பாட்டுடன் நமது கழகத்தை நடத்தி வரும் அம்மா அவர்கள் மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார்கள். 
 அந்தந்த பகுதிகளில் கழக நிர்வாகிகள்ஆஅலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். 
 பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க அம்மா அஅவர்கள் சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்கள். 
அ.தி.மு.க., இடைவெளியின்றி தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே கழக தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் தகுதி பெற்றவர்கள். கழக உறுப்பினராக இருக்கும் கால கட்டத்தில் கழக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதியற்றவர்கள்.
 இந்த தேர்தலை சிறப்பாக நடத்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பொறுப்பாளர்கள் வர உள்ளனர். அவர்களுடன் இணைந்து, இந்த தேர்தலை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:&
பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொளவ்து; வருகிற அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது. திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக நிதியை வாரி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது. 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வண்ணம் சிறப்பாக செயலாற்றுவது, அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில், தொகுதி செயலாளர் ஜே.ஆர்.ஜான், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன்,  அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மருத்துவரணி செயலாளர் சீனியம்மாள், வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, வீரபாண்டி சோமு, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், மீனவரணி செயலாளர் தங்கமுத்து, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், நல்லூர் நகர செயலாளர் டெக்ஸ்வெல் முத்து, வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,அவினாசி சுப்பிரமணி, ஜெகதாம்பாள், அன்னூர் சவுகத் அலி,பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, நத்தக்காட்டு மணி,  சேவூர் வேலுசாமி, சில்வர் வெங்கடாச்சலம், எச்.ஆர்.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி., தியாகராஜன், கருணாகரன், கண்ணபிரான், தம்பி மனோகரன், பல்லடம் சித்ரா தேவி, ஏ.எஸ்.கண்ணன், சடையப்பன், கவுன்சிலர்கள் வசந்தாமணி, கேபிள் சிவா, சுபா மோகன், ஆனந்தன், லட்சுமி, வேலுசாமி, பிரியா சக்திவேல், சத்யா, கல்பனா, பேபி தர்மலிங்கம், ஜெயந்தி, சண்முகசுந்தரம், கே.பி.சண்முகம், வேலுசாமி,செல்வம்  சின்னசாமி, கனகராஜ், சபரி, கணேஷ், பாலன், சேகர், ஈஸ்வரன், சின்னசாமி, செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், அமுதா, முருகசாமி, உமா மகேஷ்வரி, கனகரராஜ், கலா, செல்வி, சுஜாதா சின்னசாமி, யு.எஸ்.பழனிசாமி, சரளை ரத்தினசாமி,அன்னூர் காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், ராஜேஷ்கண்ணா, நீதிராஜன், பரமராஜன், ரத்தினகுமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி,  செந்தில், மூர்த்தி, செல்வம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், வே.சரவணன், பாஸ் என்கிற பாஸ்கரன், அசோக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்








திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் விஜயகுமார், ரங்கசாமி,  கண்ணப்பன், பட்டுலிங்கம், சண்முகசுந்தரம், பூளுவபட்டி பாலு, மற்றும் கருவம்பாளையம் மணி, தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

50 பேர் ரத்த தானம் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் துவக்கி வைத்தார்








திருப்பூர் ,டிச.22-

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாம் நேற்று காலை  திருப்பூர் டவுனில் உள்ள பிக் பஜார் வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு நம்பிக்கை அமைப்பு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சரவணன் தலைமை தாங்கினார். 45 வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், நம்பிக்கை நிறுவனர் ரஹீம், மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிக் பஜார் மேலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்தார்.முகாமில் பிக் பஜார் ஊழியர்கள்,பொதுமக்கள் 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். இதனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சண்முகவடிவு பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனை முகாமை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.தங்கவேல் தொடக்கி வைத்தார். இதில் 79 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள்   ராதாகிருஷ்ணன், ஜான் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், கழக அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, கே.என்.சுப்பிரமணி, கீதாஆறுமுகம்,  நிர்வாகி ஏ.எஸ்.கண்ணன் மற்றும் நம்பிக்கை அமைப்பின் 1 வது மண்டல நிர்வாகிகள் பாலாஜி, செல்வம், மணிவேல் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பிக் பஜார் துணை மேலாளர் தேவராஜ் நன்றி கூறினார். இதைதொடர்ந்து பிக் பஜார் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கிருஸ்துமஸ் குடிலை அனைவரும் பார்வையிட்டு  பாராட்டினார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை  நம்பிக்கை நிர்வாகிகள் சதானந்தம், நாராயணசாமி, நக்கீரன், காளீஸ்வரன், சையது அபுதாகீர், சுதாகர், ராஜேந்திரன், குமார் ஆகியோர் செய்து இருந்தனர். 

படம் : திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்த போது  எடுத்தபடம்

திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்






திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  திறந்து வைத்தார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கலைமகள் கோபால்சாமி தலைமை  தாங்கினார்கள்.
மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,  ஜான், முத்துசாமி,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ,  கழக அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன் ராஜ், தங்கமுத்து, கே.என்.சுப்பிரமணி,  கவுன்சிலர்கள் முத்து, கீதா, கலைமகள் கோபால்சாமி,  ஏ.எஸ்.கண்ணன், கருணாகரன், சின்னு, ரத்னகுமார், நீதிராஜன், ராஜேஷ் கண்ணா,  ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Oct 17, 2014

எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி திருக்கோவிலில் கட்சியில் பொதுசெயலாளார் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பில் இருந்து மீண்டு வந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது

Displaying CIT_9012.JPG
திருப்பூர் மாநகர் மாவட்டம், அண்ணா தி.மு.க.சார்பில், மாவட்ட கழக செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான  எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி திருக்கோவிலில்  கட்சியில் பொதுசெயலாளார் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பில் இருந்து மீண்டு வந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன் வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பழனிசாமி,துணை தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர்  லதா சேகர், அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Oct 8, 2014

அவினாசி கோவிலில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அங்கப்பிரதட்சணம்

 




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் , மக்கள் முதல்வர் அம்மா மீண்டு வர  வேண்டி அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க., வினர் நூற்றுக்கணக்கானோர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதில் கருப்பசாமி எம்.எல்.ஏ., திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள்  ஜான்,ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி,  கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், வக்கீல் சுப்பிரமணியம், பாசறை சதீஷ், பேரூராட்சி தலைவர்கள் ஜெகதாம்பாள், பழனிசாமி, துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, ஜெகதீசன், நகர செயலாளர் ராமசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், சேவூர் வேலுசாமி,  திருப்பூர் கவுன்சிலர்கள் கணேஷ், கீதா, கருணாகரன், கனகராஜ், தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி,ரத்தினகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Sep 25, 2014

இணையதள சேவை கிராமங்களை சென்றடைய கேபிள் மூலம் சேவை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு










திருப்பூர், செப். 25-
திருப்பூர்   மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் இரயில்டெல் நிறுவனம் மூலம் அதிவேக அகண்ட அலைவரிசை  சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள் வழங்குவது குறித்து  கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்கள் உடனான  விளக்க கூட்டம் மாவட்ட கலெக்டர்   கு.கோவிந்தராஜ்   தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர் உடுமலை .கே.ராதாகிருஷ்ணன்   முன்னிலை வகித்தார்..  இக்கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர்   எம்.எஸ்.எம்.ஆனந்தன்  சிறப்புரையாற்றினார்.
 வனத்துறை அமைச்சர்   எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர் களின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமானது   அனைத்து மக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையை பெறும் திட்டமான அகண்ட அலைவரிசை திட்டத்தை (பிராட்பேன்ட்) துவக்குகிறது.    கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்  விதி எண்.110-ன் கீழ் அறிவித்த அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள், ஆகியவற்றை இரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.  அதன்படி இந்தச் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற வந்துள்ள ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பயன்பெற்று மக்களுக்கு இச்சேவையினை சென்றடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் களின் சேவை அனைவருக்கும் தேவை என்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் இணையதள சேவைகளை தங்கள் வாயிலாக அனைத்து குக்கிராம மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக கேபிள் டி.வி. மூலமாக செயல்படுத்தி உள்ளார்கள்.  இதன் மூலமாக கேபிள் டி.வி. ஆபரேட்டா;கள் தங்கள் வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும் உயரும்.  எனவே இச்சேவைகளை திறம்பட செய்ய வேண்டும்.  மேலும் இத்தகைய கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு இன்னும் பல சலுகைகளை வழங்க உள்ளார்கள்.  விரைவில் அதற்கான அறிவிப்பையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா அவா;கள் அறிவிக்க உள்ளாலீ;கள்.  இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன்   பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவா;  உடுமலை .கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா  கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை, நிறுவி திறம்படி செயல்படுத்தி வருகிறார்கள்.  இதனால்  கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் பொதுமக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையினை பெற முடிகிறது.  3 ஆண்டுகள் கேபிள் டி.வி. நிறுவனம் ரூ.12 கோடி இலாபத்தினை அடைந்துள்ளது.  மேலும் தமிழ்நாட்டில் 27000 கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் உள்ளனர் 
முன்னதாக, இரயில்டெல் நிறுவனம் மூலமாக தயாரி க்கப்பட்ட இணையதள தொழில்நுட்பம் குறித்து விளக்க குறுந்தகடுகள் (சி.டி.)   வனத்துறை அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன் ,  தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர்   உடுமலை  கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்   கு.கோவிந்தராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைமை தொழில்நுட்ப அலுவலர்   .பி.முரளி, முதுநிலை மேலாளர் ; (தொழில் நுட்பம்)  .பழனிவேலன், மேலாளர்  (வர் த்தகம்) இரயில்டெல் கிருபானந்தன்,  கிளை மேலாளர் தனிவட்டாட்சியர்  எம்.விஜயகுமார், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கேபிள் பாலு மற்றும் திருப்பூர்  ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டாகள் உட்பட பலா கலந்து கொண்டனா;.

அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.







திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. பேரூராட்சி கழக செயலாளர் பூண்டி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, தலைமை கழக பேச்சாளர் ,செல்வராஜ், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி கழக செயலாளர் வேலுசாமி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பூண்டி லதா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆனந்தகுமார், கருவம்பாளையம் மணி, ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் , அங்கேரிபாளையத்தில் நடந்தது.














திருப்பூர் மாநகர் மாவட்ட  அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ,  அங்கேரிபாளையத்தில் நடந்தது. 
பேரூராட்சி ஒன்றிய செயலாளர் கே..விஜயகுமார்,  தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ் .எம்.ஆனந்தன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் பாண்டியன், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, ஒன்றிய தலைவர் சாமிநாதன் ஆகியோர்  வரவேற்றனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, ச்டீபனராஜ், பூளுவபட்டி பாலு, பட்டுலிங்கம், எஸ்.எம்.பழனிசாமி, மார்க்கேட்சக்திவேல், எஸ்.ஆர். ஜெயக்குமார்,தம்பி மனோகரன், பாசறை செயலாளர் தங்கராஜ், சடையப்பன்,கருனாகறன, கவுன்சிலர்கள்  சத்யா, கல்பனா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம்,நீதிராஜன், ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Sep 24, 2014

ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நிதி, வணிகவரித்துறை திட்டங்கள் பற்றி ஆலோசனை



சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று (23–ந் தேதி) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிதித்துறை, வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன.

பின்னர் அதுபற்றி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது.